Expose the problems of srilankan upcountry tamil people to the world.Currently this population is under privileged and denied basic human rights.Even being permanent residents for a period of 175 years, very resantly only (in 1985) they had given citizenship and voting rights.This people needs to be helped.Since 1992 the entire population re gained citizenship and voting rights,but,they are not govern by parliament or other local government authorities..
Pages
POPULATION
Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.
a tea estate with dwelings
it is so cold
there is no way out
sun set pictures near galle
perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance
workers children.....it is difficult to smile
Thursday, July 3, 2014
Wednesday, April 16, 2014
Sunday, September 29, 2013
ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே ...
- ச. ஜேசுநேசன் -
இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேசங்களில் அண்மையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தன. ஒன்று வட மாகாணம், இதில் ஐந்து மாவட்டங்கள். ஐந்திலும் தமிழரே பெரும்பான்மையினர். மற்றையது மத்திய மாகாணம். இதில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் நுவரெலியா மாவட்டம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டம் நுவரெலியாதான்.
வடக்கு மாகாணத்தில் தமிழரே 95% வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அது இயல்பு. நுவரெலியா மாவட்டத்திலும் மொத்த மாவட்ட உறுப்பினர் 16 பேரில் 11 தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்., அதாவது 69% தமிழ் உறுப்பினர்கள். ( 2010 பொதுத் தேர்தலின் போது மாவட்டத்தின் மொத்த பா.ம. உறுப்பினர்கள் 7 பேரில் 5 பேர் தமிழர். அத்துடன் தேசியப் பட்டியலில் இருந்தும் ஒரு தமிழர். அவரும் நுவரெலியா காரர்தான் ). மேலே குறிப்பிட்ட 11 புதிய மா.ச. உறுப்பினர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆதாவது ஆளுங்கட்சியினர். ஒருவர் ஐ.தே.க. காரர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், வட மாகாணத்தில் எதிர்க் கட்சி (த.தே.கூ) தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலோ வெற்றி பெற்ற 11 தமிழர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூ-வினர். என்னே நேரெதிர் மாற்றம் !.
இத்தனைக்கும் வட பகுதித் தமிழருக்குத்தான் பிரச்சினை. மலையகத் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதல்ல. அவர்களின் அரசியல், மொழி, கல்வி, பண்பாட்டு, அசையாச் சொத்து, நிர்வாக, பொருளாதார உரிமைகளும் நிலைமைகளும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உரிமைகளோடும் நிலைமைகளோடும் ஒப்பிடும் போது படுபாதாளத்தில் இருக்கின்றது. அவை பற்றி அந்த மக்களுக்கு கவலையில்லை, அவர்களின் தலைமைகளுக்கும் அக்கறை இல்லை. சுதந்திர இலங்கையில், இலங்கை வம்சாவளித் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட மக்களாவர். இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களோ உரிமை பறிக்கப்பட்ட மக்களாவர்.
வடபுலத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் அரசுடன் போராடி, பேரம் பேசி தமிழுருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் அவ்வாறு செய்யாது விட்டால், அரசுடன் சேர்ந்து ஆட்டமாடி, காட்டிக் கொடுத்து, கொள்ளையடித்து அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த ட்ரக்லெஸ் (trackless) குழுவுக்கு நடந்த கதிதான் அவர்களுக்கும் நடக்கும்.
ஆனால், நுவரெலியா மாவட்டத்திலோ அப்படியல்ல. வெற்றி பெற்றிருப்பது ஐ.ம.சு.கூ. என்ற ஆளுங்கட்சியே. எனவே, வெற்றி பெற்ற அத்தனை தமிழ் உறுப்பினர்களும் சிந்தனைக்காரர் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய மட்டுமே முடியும். எதிர்த்துப் பேச முடியாது. கௌரவ பா.ம. உறுப்பினர்களான தொண்டமான், சிவலிங்கம், திகாம்பரம், இராஜதுரை, இராதாகிருஷ்ணன், ஶ்ரீரங்கா ஆகியோர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த 10 ஆளுங்கட்சிசார் நுவரெலியா மாவட்ட எம்பிசி மார்களும் (மாகாணசபை உறுப்பினர்கள்) இதையே செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் தன்மானம், தன்னம்பிக்கை, தனித்துவம், தமிழ்மொழி, தமிழினம் அத்தனையும் விற்றுவிட்டு அந்தப் பணத்துக்கு வெற்றிலை வாங்கி சப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சப்பல்களைத்தான் அவர்களால் செய்ய முடியும்.
அவர்களின் மத்திய மாகாண சபையின் புதிய முதலமைச்சராக வருபவர் யாரென்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தொண்டமான், திகாம்பரம், ரங்கா ஆகியோருக்கப் போன்று மலையக அரசியல் இவர்களுக்குப் புதிது. புதிதாக முதலமைச்சராக வருபவர், அவர்தான் 1977 ல் புசலாவை பகுதி டெல்டா, சோகமை, சங்குவாரி தோட்ட லயங்களை எரித்து தோட்ட மக்களை நடுத்தெருவுக்கு விரட்டிய தலைவனின் புத்திரன். எனவே, இனி இந்த 10 பேரினதும் மற்றும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தெரிவான இரண்டு அரசாங்க கட்சி தமிழ் உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன்,
1. தோட்டங்கள் துண்டாடப்படும்,
2. சிங்களவருக்கு அந்த தோட்டக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படும்,
3. இந்த புதிய மாகாணசபைத் தமிழ் உறுப்பினர்கள் போட்டி போட்டிக்கொண்டு தோட்டங்கள் தோறும் சந்திக்கு சந்தி, மூலைக்கு மூலை மதுக்கடைகளை ஆரம்பிப்பார்கள்,
4. போதைப் பொருள் வியாபாரத்தில் அனுபவமிக்க மலையக அரசியல் தலைவர்மார், ஏற்கனவே பெருங்’குடி’ மக்களாக இருக்கும் மலையக மக்களை, போதைப்பொருள் பாவித்தலிலும் சம்பியன்களாக ஆக்குவார்கள்.
5. டெம்பரரி செட்டுக்கு (தற்காலிக கொட்டகை) கொஞ்சம் தகரம் கொடுப்பார்கள், கோயிலுக்கு மணி கொடுப்பார்கள், களிப்புடன் ஆடிப்பாடி மகிழ வாத்தியக் கருவிகள் வாங்கிக் கொடுப்பார்கள், கொஞ்சம் கிறிக்கட் மட்டைகளும் பந்துகளும் வழங்குவார்கள்.
6. இடைக்கிடையே தமிழ் நாட்டுக்குப் பறந்து தமது சின்ன வீடுகளையும் கவனித்து வருவார்கள்.
அப்பாடா, இத்துடன் மலையக மக்களின் பிர்ச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டோமென்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இப்படியானவற்றைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இனி அடுத்த தேர்தலில் நிற்பார்கள். ‘பார்’கள் கைகொடுக்கும். வெல்வார்கள்.
ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே உங்களுக்கு எப்போது அறிவு (உணர்ச்சி) வரும் !!.
- ச. ஜேசுநேசன் -
இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேசங்களில் அண்மையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தன. ஒன்று வட மாகாணம், இதில் ஐந்து மாவட்டங்கள். ஐந்திலும் தமிழரே பெரும்பான்மையினர். மற்றையது மத்திய மாகாணம். இதில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் நுவரெலியா மாவட்டம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டம் நுவரெலியாதான்.
வடக்கு மாகாணத்தில் தமிழரே 95% வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அது இயல்பு. நுவரெலியா மாவட்டத்திலும் மொத்த மாவட்ட உறுப்பினர் 16 பேரில் 11 தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்., அதாவது 69% தமிழ் உறுப்பினர்கள். ( 2010 பொதுத் தேர்தலின் போது மாவட்டத்தின் மொத்த பா.ம. உறுப்பினர்கள் 7 பேரில் 5 பேர் தமிழர். அத்துடன் தேசியப் பட்டியலில் இருந்தும் ஒரு தமிழர். அவரும் நுவரெலியா காரர்தான் ). மேலே குறிப்பிட்ட 11 புதிய மா.ச. உறுப்பினர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆதாவது ஆளுங்கட்சியினர். ஒருவர் ஐ.தே.க. காரர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், வட மாகாணத்தில் எதிர்க் கட்சி (த.தே.கூ) தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலோ வெற்றி பெற்ற 11 தமிழர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூ-வினர். என்னே நேரெதிர் மாற்றம் !.
இத்தனைக்கும் வட பகுதித் தமிழருக்குத்தான் பிரச்சினை. மலையகத் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதல்ல. அவர்களின் அரசியல், மொழி, கல்வி, பண்பாட்டு, அசையாச் சொத்து, நிர்வாக, பொருளாதார உரிமைகளும் நிலைமைகளும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உரிமைகளோடும் நிலைமைகளோடும் ஒப்பிடும் போது படுபாதாளத்தில் இருக்கின்றது. அவை பற்றி அந்த மக்களுக்கு கவலையில்லை, அவர்களின் தலைமைகளுக்கும் அக்கறை இல்லை. சுதந்திர இலங்கையில், இலங்கை வம்சாவளித் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட மக்களாவர். இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களோ உரிமை பறிக்கப்பட்ட மக்களாவர்.
வடபுலத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் அரசுடன் போராடி, பேரம் பேசி தமிழுருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் அவ்வாறு செய்யாது விட்டால், அரசுடன் சேர்ந்து ஆட்டமாடி, காட்டிக் கொடுத்து, கொள்ளையடித்து அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த ட்ரக்லெஸ் (trackless) குழுவுக்கு நடந்த கதிதான் அவர்களுக்கும் நடக்கும்.
ஆனால், நுவரெலியா மாவட்டத்திலோ அப்படியல்ல. வெற்றி பெற்றிருப்பது ஐ.ம.சு.கூ. என்ற ஆளுங்கட்சியே. எனவே, வெற்றி பெற்ற அத்தனை தமிழ் உறுப்பினர்களும் சிந்தனைக்காரர் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய மட்டுமே முடியும். எதிர்த்துப் பேச முடியாது. கௌரவ பா.ம. உறுப்பினர்களான தொண்டமான், சிவலிங்கம், திகாம்பரம், இராஜதுரை, இராதாகிருஷ்ணன், ஶ்ரீரங்கா ஆகியோர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த 10 ஆளுங்கட்சிசார் நுவரெலியா மாவட்ட எம்பிசி மார்களும் (மாகாணசபை உறுப்பினர்கள்) இதையே செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் தன்மானம், தன்னம்பிக்கை, தனித்துவம், தமிழ்மொழி, தமிழினம் அத்தனையும் விற்றுவிட்டு அந்தப் பணத்துக்கு வெற்றிலை வாங்கி சப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சப்பல்களைத்தான் அவர்களால் செய்ய முடியும்.
அவர்களின் மத்திய மாகாண சபையின் புதிய முதலமைச்சராக வருபவர் யாரென்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தொண்டமான், திகாம்பரம், ரங்கா ஆகியோருக்கப் போன்று மலையக அரசியல் இவர்களுக்குப் புதிது. புதிதாக முதலமைச்சராக வருபவர், அவர்தான் 1977 ல் புசலாவை பகுதி டெல்டா, சோகமை, சங்குவாரி தோட்ட லயங்களை எரித்து தோட்ட மக்களை நடுத்தெருவுக்கு விரட்டிய தலைவனின் புத்திரன். எனவே, இனி இந்த 10 பேரினதும் மற்றும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தெரிவான இரண்டு அரசாங்க கட்சி தமிழ் உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன்,
1. தோட்டங்கள் துண்டாடப்படும்,
2. சிங்களவருக்கு அந்த தோட்டக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படும்,
3. இந்த புதிய மாகாணசபைத் தமிழ் உறுப்பினர்கள் போட்டி போட்டிக்கொண்டு தோட்டங்கள் தோறும் சந்திக்கு சந்தி, மூலைக்கு மூலை மதுக்கடைகளை ஆரம்பிப்பார்கள்,
4. போதைப் பொருள் வியாபாரத்தில் அனுபவமிக்க மலையக அரசியல் தலைவர்மார், ஏற்கனவே பெருங்’குடி’ மக்களாக இருக்கும் மலையக மக்களை, போதைப்பொருள் பாவித்தலிலும் சம்பியன்களாக ஆக்குவார்கள்.
5. டெம்பரரி செட்டுக்கு (தற்காலிக கொட்டகை) கொஞ்சம் தகரம் கொடுப்பார்கள், கோயிலுக்கு மணி கொடுப்பார்கள், களிப்புடன் ஆடிப்பாடி மகிழ வாத்தியக் கருவிகள் வாங்கிக் கொடுப்பார்கள், கொஞ்சம் கிறிக்கட் மட்டைகளும் பந்துகளும் வழங்குவார்கள்.
6. இடைக்கிடையே தமிழ் நாட்டுக்குப் பறந்து தமது சின்ன வீடுகளையும் கவனித்து வருவார்கள்.
அப்பாடா, இத்துடன் மலையக மக்களின் பிர்ச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டோமென்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இப்படியானவற்றைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இனி அடுத்த தேர்தலில் நிற்பார்கள். ‘பார்’கள் கைகொடுக்கும். வெல்வார்கள்.
ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே உங்களுக்கு எப்போது அறிவு (உணர்ச்சி) வரும் !!.
Friday, June 7, 2013
Tuesday, April 30, 2013
Tuesday, March 5, 2013
வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-01
கண்டி மன்னன் ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்
-மணி ஸ்ரீகாந்தன்-
சென்னையிலிருந்து நூற்றி நாற்பது கிலோமீட்டரை பெங்களுர் அதிவேக பாதையின் ஊடாக கடந்தால் வேலூரை சென்றடையலாம். கடுமையாக வெயில் காயும் இடம் என்பதால் வெயிலூர் தான் வேலூர் ஆனது என்றும்
![]() |
| ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் |
| மன்னர் சிறைவைக்கப் பட்ட வேலூர் கோட்டை |
நம் நாட்டை சேர்ந்தவர்கள் வேலூருக்கு சென்றால் இவ்விரு இடங்களையும் பார்க்கத் தவறுவதில்லை. அன்மையில் சென்னையில் உள்ள நமது இலங்கை துணைத்தூதரகத்தின் தூதரக செயலாளர் அந்தபாங்கொடை உள்ளிட்ட அதிகாரிகள் குழு மன்னரின் கல்லறையை பார்வையிட்டு திரும்பியிருக்கிறது. நம் நாட்டு அதிகாரிகளின் இந்த வருகையை ஒழுங்கு செய்தவர் 'அரண்மனை' வசந்த குமார். இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் நம் நாட்டின் பழைய கலைஞர். கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வேலூரில் வசித்து வரும் இவர் வடாற்காடு மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளராகவும் சமூக நல தொடர்பு மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
![]() |
| வசந்த குமார் |
“நம் நாட்டு மன்னரின் கல்லறையில் சில பணிகளை செய்வதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகின்றேன். இங்கே கடந்த இருபது ஆண்டுகளாக முத்து மண்டப காப்பாளராக பணியாற்றி வரும் முனியம்மாவுக்கு குறைந்த ஊதியமான நூற்று ஐம்பது ரூபாய் தான் கிடைத்து வந்தது. எனது அழைப்பை ஏற்று அ.தி.மு.க அமைச்சர் விஜய் அன்மையில் முத்து மண்டபத்தை பார்வையிட்டதோடு மண்டப காப்பாளர் முனியம்மாவிற்கு இரண்டாயிரம் ரூபா ஊதிய உயர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார். விரைவில் விக்கிரம ராஜசிங்கனின் அறக்கட்டளையை தொடங்கி அதில் கிடைக்கும் நிதியில் வேலூரில் மன்னரின் சிலை அமைக்கும் பணியை தொடங்க இருக்கின்றோம்" என்று 'அரண்மனை' வசந்தகுமார் எம்மிடம் தெரிவித்தார்.
| முத்து மண்டபம் |
பண்ணிரெண்டு இதழ்களை கொண்ட தாமரைப்பூவின் நடுவில் முத்து இருப்பது போல காட்சியளிக்கும் முத்து மண்டபம் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1990 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த வேலூர் கோட்டை, 16ஆம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் என்ற தெலுங்கு நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். கோட்டையை சுற்றிலும் கருங்கற் சுவர் எழுப்பப்பட்டதோடு கோட்டையை சுற்றிலும் எட்டாயிரம் அடி நீளமான அகழியும் அமைந்துள்ளது. 20 அடி முதல் 100 அடி வரை ஆழம்கொண்டதாக இந்த அகழி காணப்படுகிறது. பொம்மி நாயக்கருக்கு பிறகு இந்தக்கோட்டை ஆற்காட்டு நவாப்புகளின் வசமானது.
| மன்னர் குடும்பத்து கல்லறைகள் |
முன்னர் கோட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இழுவைப்பாலமே இருந்ததாம். பிறகு 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் இது கல் பாலமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் 1806 ஆம் ஆண்டில் தொடங்கியதே இந்தக்கோட்டையில் தான்.
கோட்டை வளாகத்தினுள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில் கண்டி மன்னன் பாவித்த சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட பதிவாளர் திணைக்களம், காவலர் பயிற்சிப்பள்ளி, ஆற்காட்டு நவாப்புகள் கட்டிய பள்ளி வாசல், பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ தேவாலயம், சின்ன பொம்மி நாயக்கர் கட்டிய பிரமாண்டமான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை கோட்டைக்குள் உள்ளன. கடந்த சில ஆண்டுகள் வரை, வேலூர் மாவட்ட நீதிமன்றம், கலக்டர் அலுவலகம், இலங்கை அகதிகள் முகாம் ஆகியவை இங்கேயே இயங்கி வந்தன. தற்போது அவை வேலூரின் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக ராஜீவ் கொலைக்குற்றவாளிகளான சின்ன சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி கோட்டை சிறையிலிருந்து 43 விடுதலைப்புலிகள் 152 அடி தூரத்திற்கு சுரங்கம் அமைத்து தப்பி சென்றதன் பின், ராஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட கைதிகள், வேலூர் தொரப்பாடி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.
1815 இல் ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின் கண்டி மன்னர் ராஜசிங்கன் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கே சில மாதங்கள் கழிந்த பின் 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி மன்னரும் அவரின் துணைவியார்கள் நான்கு பேரும் கொழும்பு கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது அந்தக்கப்பலில் மன்னருடன் ஒரு ஆங்கில அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். அவர் பெயர் ‘வில்லியம் கிரண்வில்’ இவர் மன்னருடன் கப்பலில் சென்ற அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.
சென்னையை சென்றடைந்த மன்னன் பின்னர் வேலூர் கோட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மன்னர் சிறை வைக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் தான் தற்போதைய வேலூர் மாவட்ட (ரிஜிஸ்டர் அலுவலகம்) பதிவாளர் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.
![]() |
| மன்னர் சிறைவைக்கப் பட்ட இடம் (ரிஜிஸ்டர் ஆபிஸ்.வேலூர்) |
இந்தப் பதிவாளர் திணைக்களம் இரண்டு மாடிகளை கொண்டிருக்கிறது. அதில் கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைதான் அந்தக்காலத்தில் சிறைக்கூடமாக செயற்பட்டிருக்கிறது. அந்த அறையின் நீளம் 30 அடியாகவும் அகலம் 20 அடியாகவும் காணப்படுகிறது.
அந்த அறையில் தான் பதினெட்டு ஆண்டுகளை மன்னன் கழித்திருக்கிறார். மன்னரின் சிறை வாசத்தின் போது அவருடன் இரண்டு மனைவி மார் உடன் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு வரும்போது மன்னரின் ஒரு மனைவி கப்பலிலேயே இறந்து விட்டார். மன்னரின் சிறை வாழ்க்கையில் மன்னரின் மனைவி வெங்கட ரெங்கம்மாள் சிறையிலேயே மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார். பிறகு மன்னர் 1834 ஜனவரி 30 ஆம் திகதி அன்று தனது 53 வது வயதில் சிறையிலேயே மரணமாகி விட அவரின் இறுதிக்கிரியைகளை வேலூர் பாலாற்றங்கரையில் நடாத்தியிருக்கிறார்கள். பிறகு மன்னருக்கு அந்த இடத்தில் ஒரு கல்லறையை அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்கு பிறகு அவரின் துணைவியரை ஆங்கிலேய அரசு விடுதலை செய்துவிட்டது. வேலூர் தோட்டப்பாலையத்தில் காணி பெற்று குடியமர்த்தியிருக்கிறார்கள்;
இது தவிர மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரும் சில வருடங்கள் வரை மன்னர் குடும்பத்திற்கான மானியத்தொகை இங்கிருந்து முறையாக அனுப்பப்பட்டு வந்திருக்கிறது. அந்தக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு வரி கட்டிய குடும்பங்களில் கண்டி மன்னரின் குடும்பமும் அடங்கும். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த ராஜகுடும்பத்தின் ராஜ யோகம் பறிபோய் வறுமையில் தள்ளாடத்தொடங்கியதோடு மன்னரின் வாரிசுகள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு இடம்பெய்ந்தார்கள். இன்று மன்னரின் வாரிசாக விளங்கும் பிருத்விராஜன் வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிறார். மற்றவர்கள் சென்னை, பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள்.
(இன்னும் வரும்)
Posted by Mani Srikanthan at 9:34 AM
Subscribe to:
Posts (Atom)






1 comment: