POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Tuesday, April 20, 2010

"மலையகத் தமிழர் ஒரு......

மலையகத் தமிழர்
தனியானதொரு
தேசிய சிறுபான்மையினரா ?'


டி. ஜெயராமன்

உலக மக்கள் அனுதாபப் பார்வையினை ஈர்ந்த மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கொடுமையான முறையில் கூலி அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர் என்ற வரலாற்று உண்மையினை கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது இன்றுவரையும் அவர்கள் பல்வேறு வகையிலும் வடிவிலும் சமூக பொருளாதார அரசியல் ரீதியான ஒடுக்கு முறைகளை சந்தித்துள்ளனர், சந்தித்துவருகின்றனர். என்பதை அனைவரும் அறிவர். இவ் விடயத்தை வரலாற்று உண்மைகளை கண்டு பின்வாங்குபவர்கள் மட்டுமே மறந்து விட முடியும் என்ற அடிப்படையில் மலையக அறிவுஜீவிகள் பலர் இம் மக்களின் தேசிய உரிமைப் பற்றிய ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்து அதனை உறுதிபடுத்தவும் முயன்றிருக்கின்றனர்.

அண்மையில் இம் மக்கள் தொடர்பாக கண்ணோட்டம் செலுத்திய சிலர் இம் மக்களின் தனித்துவத்தினை இனங்கண்டு, அதனை கருத்திற் கொள்ளாது இந்த மக்களை இன்னொரு இனத்துடன் சங்கமிக்கவைப்பதுடன் ஊடாகவே ஒடுக்குமுறைக்கு எதிராக தமது அரசியல் உரிமைகளை வென்று எடுக்க முடியும் என்று பொருள்பட சில கருத்துக்களை முன்வைத்துள்ளமை அவதானத்திற்குரியதே !

மலையகம் தொடர்பான மலையக புத்திஜீவிகளின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு கருத்தோட்டத்தினை இக் கட்டுரை கொண்டிருப்பதே பிரதான காரணமெனலாம்.

இது விடயத்தில் "பாட்டாளி வர்க்கத்துக்கு பணிபுரிய விரும்புவோர் எல்லா தேசிய இனங்களையும் ஒன்றுபட செய்ய வேண்டும்.' தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்கு முறையையும், சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடாத எவரும் மார்க்ஸிய வாதி அல்ல, ஜனநாயக வாதியும் கூட அல்ல' என்ற லெனினுடைய கருத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைக்கலாம் எனக் கருதுகின்றேன்.

முதற்கட்டமாக மலையகத் தமிழர் சுயமாகவே ஒரு தேசிய சிறு பான்மை இனமா? என்ற வினாவிற்கு விடைகாணுவோம்.

"உறுதியான இன மத அல்லது மொழி மரபுகளை அல்லது இயல்புகளை அங்கு வாழும் மற்றைய மக்களிடமிருந்து வேறுபட்டுக் கொண்டிருப்பதோடு அவற்றைப் பாதுகாக்கவும் விரும்பும் ஆக்கிரமிப்பு செலுத்தாத குழுவினையே சிறுபான்மை என்ற பதம் உள்ளடக்குகின்றது.'

"அண்மைக்கால எண்ணக் கருவொன்று பொது இயல்புகளைக் கொண்ட ஒரு குழு தம்மைத்தாமே தனியான ஒரு சிறுபான்மை இனம் எனக் கொண்டால் அந்தக் குழுவினை ஒரு தேசிய சிறுபான்மை இனமாகக் கொள்ளுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.'

தென்னிந்தியாவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் இடங்களிலிருந்து மிகவும் கொடூரமான முறையில் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டனர் மலையகத் தொழிலாளர்கள்.
ஆனால் பெருந்தோட்டத் துறையின் வரலாறானது இந்திய வம்சாவளித் தொழிலாளரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கொள்ளையடித்த காட்டுமிராண்டித் தனத்தையே கொண்டிருக்கின்றது எனலாம்.

"ஆங்கிலேய நிர்வாகத்தில் தென்னிந்தியாவின் கீழ் ஜாதியினர் எமது தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டனர்' இது இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் தன் பெயரை பொறித்தவர் என்று கருதப்படும் அனகாரிக்க தர்மபாலாவின் கருத்தாக மாத்திரமன்றி முழு இலங்கையிலும் பெரும்பாலோரின் கருத்தாகவே கொள்ளலாம்.

1970ம் ஆண்டு பஞ்சம், 1977 ஆண்டு 83 ம் ஆண்டுகளில் இனக்கலவரம், எல்லாவற்றையும் விட 1948ம் ஆண்டு குடியுரிமைப் பறிப்பு என்பன, தனது உடலை எருவாக்கி, அதன் மேல் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரச் செய்தவனுக்கெதிராக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு மனித உரிமைகளை கல்லறைக்கு அனுப்பிய நடவடிக்கைகள் எனக் குறிப்பிடுவதே பொருத்தமுடையதாகும்.

மலையகத் தொழிலாளர் இலங்கை வரும் போது இங்கு கிராமிய சுய தேவை பொருளாதாரமே நெல் உற்பத்தியை அடிப்படையாக கொண்டமைந்திருந்தது என்பது வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட உண்மை. எனவே கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேற்பட்ட மலைப் பகுதியில் குளிரின் காரணமாக நெல் உற்பத்தியோ அல்லது அதனை அண்டிய குடியிருப்புகளோ நிகழ்ந்திருக்க முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய உண்மையாகும். இம் மக்கள் இங்கு குடியேறுவதற்கு முன்னர் வேறுமக்கள் வாழ்ந்ததற்கான தொல் பொருள் சான்றுகளும் இல்லை, எனவே உடலை உழைப்பை இம் மண்ணுக்கு அளித்த உரிமை மலையகத்தவர்க்கே உண்டு. ஏனெனில் உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த அடிப்படையிலேயே மக்கள் வாழ்கின்றனர் உதாரணம் அமெரிக்கர்கள் பிரித்தானியாவிலிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சென்று குடியேறியவர்களே. இன்று அமெரிக்காவில் இருந்து அமெரிக்கர்களால் விரட்ட முடியாதல்லவா?

ஒரே மொழியை பேசுகின்ற வெவ்வேறு தேசிய இனங்களை உலகில் நாம் அடையாளம் காணலாம். இங்கிலாந்துகாரரும், அமெரிக்கரும் ஐரீஷ்காரரும் ஆங்கில மொழியை பேசிய போதும் அவர்கள் வெவ்வேறு தேசிய இனங்களே, எனவே மலையகத்தவர் தமிழை பேசிய போதும் அவர்களும் தனியான வளர்ந்து வரும் தேசிய இனமே !

மலையகத்தில் பெரும்பாலானோர் பெருந்தோட்டத் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதே !

எனவே, "பொதுவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு , நாம் ஒரு வேறுபட்ட குழு என்ற உணர்வு' என்பன அவர்கள் தேசிய சிறுபான்மை இனம் என்பது மட்டுமல்ல வளர்ந்துவரும் தேசிய இனம் என்பதற்கே போதுமான ஆதாரங்களாக விளங்குகின்றன எனலாம்.

அடுத்த கட்ட அம்சமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களிலும் மலையகத் தமிழர்கள் வேறுபட்டவர்களா? என்பதை நாம் நோக்கும் போது பின்வரும் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மலையகத் தமிழர் தங்களுடைய பூர்வீக வாழ்விடமான இந்தியா அண்மையில் இருப்பதாலும், தேயிலை பயிரிடுவதற்கு முன் நிரந்தரக் குடிகளாக இல்லாமையும் (அடிக்கடி சென்று வந்தமை திருச்சிராப்பள்ளி குடியகழ்வு காரியாலயம் மூடும்வரை) இந்திய சினிமா, சஞ்சிகை, தம்முடைய அரசியல் தலைவர்கள் இந்திய அரசுடன் கொண்டுள்ள தொடர்புகள் என்பன இன்னும் அவர்களை பூர்வீக தாயகத்துடனான தொடர்பை இம் மக்கள் கைநெகிழ விடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆயின் இலங்கை தமிழ் பேசும் மக்களிடம் இவ்வாறான ஒரு தொடர்பை விட தாம் தனியான ஒரு இனம் என்ற உணர்வே காணப்படுகின்றது.

அலையலையாக இங்கு வந்து குடியேறிய இந்த மக்கள் ஏனைய இனங்களுடன் கலந்துவிடாமல் தம்மை ஒரு தனியான குழு என்ற உணர்வுடன் தம் இன அடையாளங்களை பேணி வருகின்றனர்.

பிரதேச அமைவிடமும் அவர்களை ஏனைய தமிழரிடம் இருந்து வேறுபடுத்துகின்றது. அடர்த்தியாக செறிந்து வாழும் அவர்களுக்கு ஏனைய இனங்களுடன் கலக்காமல் தான் செறிந்து வாழும் பிரதேசம் தன்னுடையது என்ற பிரதேச உணர்வையும் ஏற்படுத்துகின்றது.

ஏனைய இலங்கை தமிழர்களிடம் இருந்து இவ் வம்சம் இவர்களை வேறுபடுத்துகின்றது எனலாம்.

இனி பொருளசாதார அடிப்படைகளும் இவர்களை தனியானதொரு இனம் என்ற உணர்வை ஏற்படுத்துவதில் முன்னிற்கும் காரணிகளாகின்றன. இலங்கை தமிழர்களும் மலையகத் தமிழர்களும் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளும் வெவ்வேறானவை அடிப்படை முரண்பாடுடையவை, எனவே தான் அவர்கள் ஏனைய தமிழரிடம் இருந்து வேறுபட வேண்டிய நிலையினை உருவாக்கிவிடுகின்றது. பொருளாதார அடிப்படையில் இம் மக்களுக்கும் ஏனையோருக்கும் இடையில் ஒற்றுமை காண்பது சிரமமே !

அடுத்து சமூக வாழக்கை அமைப்பிலும் இவர்கள் வேறுபடுகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் தேசிய ஒடுக்கு முறைகளுக்கு, எதிராக போராட முனையும் போது இலங்கைத் தமிழர் மலையகத்தை ஒரு இகழ்ச்சிக் கண்கொண்டு சம அந்தஸ்தினை வழங்காது நோக்குகின்றமையால் இம் மக்களால் தம்முடைய தனித்துவம் பேணப்பட வேண்டுமேன்ற நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர்.

தவிரவும் மலையகத்தவரின் திருமணங்கள் என்பவற்றைப் பார்க்கும் போது இலங்கைத் தமிழருடன் தம்முடைய உறவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வில்லையாதலால் இம் மக்கள் தம்முடைய இனத்திற்குள்ளாகவே திருமண உறவை வைத்துக் கொள்வதும் எமக்கு இவர்களை வேறுபடுத்தி அடையாளம் காட்டுகின்றது.

கலாசார ரீதியாக ஏனைய தமிழர்கள் மலையகத்தவரை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணமே மேலோங்கிக் காணப்படுகின்றது. மேலும் இருவரும் ஒரே மொழியையும் மதத்தையும் போற்றிய போதும் அவர்களின் பேச்சு வழக்குகளும், சமய ஆசாரங்களும் பெரிதும் வேறுபடுகின்றன. இதுவும் அவர்களை வேறுபடுத்தி காட்டுவதிலேயே செல்வாக்கு செலுத்துகின்றது.

எனினும் 81ம் ஆண்டு சனத்தொகை புள்ளிவிபரத்தின் அடிப்படையில் "மலையகத்தமிழர் தனக்கென ஒரு பிரதேசத்தைக் கொண்டிருக்கவில்லை எனலாம். ஏனெனில் நுவரெலியா மாவட்டத்திலும் 47.3 சதவீதமாகவே உள்ளனர்' என்று சிலர் கூறுவது அடிப்படையில் இம் மக்களை அரசியல் அநாதைகளாக்கி தம் விடுதலைக்கு தன்னுடன் பல்வேறு அடிப்படைகளில் முரண்பாடுடைய ஒரு சமூகத்தை சார்ந்திருக்கும் நிலையினை தோற்றுவிக்கின்றது. பேரினவாதிகளால் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட குடியேற்றம் இம் மக்களின் செறிவை குறைக்கும் வகையில் பலவேறு இணைப்புகள் என்பவற்றைக் கொண்டு இம் மக்களே இப் பிரதேசத்தின் உரிமையாளர்கள் என்ற வரலாற்று உண்மைகளை மறுப்பதே அவர்களை நாடோடிகள் ஆக்குவதற்கு ஒப்பானது. எனவே இம் மக்கள் தேசிய சிறுபான்மை இனம் என்பது மட்டும் அல்ல வளர்ந்து வரும் தேசிய இனம் என்பதற்கான அடிப்படை தகைமையான பிரதேசத்தை அவர்கள் மறுப்பது பொருத்தமற்றதே.

அரம்ப கால அரசியல் விவகாரங்களில் இம் மக்கள் சார்பாக அவர்களுடைய பிரதிநிதிகளாக பல உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இடம் பெற்றனர் என்பது யாவரும் அறிந்ததே எனவே இம் மக்களின் அரசியல் உரிமைகளை திட்டமிட்டே சிதறடிப்பதற்காக குடி உரிமை பறிப்பு தேர்தல் தொகுதிகளை அமைத்தல் திட்டமிட்ட குடியேற்றம் போன்றவற்றினை இந்த முதலாளித்துவ இனவாத அரசு மேற்கொண்டதை அவர்கள் கருத்திற் கொண்டிருப்பார்களாயின் இவ் விதமான தவறான முடிவுக்கு சென்றிருக்க மாட்டார்கள் என்பதோடு இம் மக்களின் ஆரம்ப கால இடைக்கால புள்ளி விபரங்களினை நோக்கின் இப் பிரதேசத்தில் இம் மக்களின் செறிவை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உணர முடியும்.

மலையக தமிழர்களின் பல்வேறு பண்புகளை ஆராய்ந்தால் தேசிய சிறுபான்மை இனம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய முன் நிபந்தனைகள் சில அவர்களுக்கு இல்லை என்பது தெரிய வருகின்றது. உதாரணம் பொதுவான பிரதேசம் அதேவேளையில் மற்றைய நிபந்தனைகள் பலவற்றில் அவர்கள் தகுதிவாய்ந்தவர்களாக உள்ளனர் எனக் குறிப்பிடுவதில் சிறுபான்மையோருக்கு இருக்கக் கூடிய முன் நிபந்தனைகள் சில அவர்களுக்கு இல்லை என குறிப்பிட உதாரணமாக பொதுவான பிரதேசம் என்பது ஏற்கனவே பொருத்தப்பாடுடையது அல்ல என்பது தெளிவு. எனவே மலையகத்தவர் ஒரு வளர்ந்து வரும் தேசிய இனம் என்பதற்கே போதுமான தகைமை உடையவர்களாக இருக்கும் போது பிரதேச அடிப்படையில் அத் தன்மையை குறைப்பது தவறான போக்கேயாகும்.

இலங்கைத் தமிழர் பல்வேறு அம்சங்களிளும் முன்னேறியவர்களாக இருப்பதனால் மலையகத்தமிழர் தம்மை அவர்களோடு இனங்கண்டால் எமக்குரிய இடத்தை இழந்து விடக்கூடும் என அஞ்சுகின்றார்கள் என குறிப்பிடுவதும் .

அதாவது இலங்கைத் தமிழர்களோடு போட்டியிடமுடியாமல் மேம்படுத்திக்கொள்ள முடியாமல் மேம்படுத்த முடியாதிருக்கும் என நம்புகின்றமை தவறானதாகும். ஆனால் இந்நிலை தற்காலிகமானதே மலையகத் தமிழர்களும் மற்றவர் சமமான நிலையினை அடையும் போது இலங்கை தமிழர் அளவுக்கு வளர்ச்சியடைந்தால் தம்மை தனியாக அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. அப்போது அவர்கள் தன்மை இலங்கைத் தமிழரோடு சேர்ந்து தமிழர் என அடையாளம் காணுவர்.

மேற் கூறிய இரண்டு கருத்துக்களும் முன்பின் முரணான தன்மை கொண்டவை, அதாவது மலையகத் தமிழர் தம்மை தனியாகவே இனம் காணவிரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் இலங்கை வந்த போது இலங்கையில் இருந்த ஏனைய இனங்களோடு தமிழர்களும் இன்று போல் அவர்களை தமிழர்களாக காணவில்லை அடிமைகளாகவே கண்டனர். தவிரவும் மலையகத்தவர் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகளும் வேறுபட்டவை. புவியியல் அமைவிடம் என்பன இம்மக்கள் இவ்வாறான ஒரு வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இட்டுச் செல்கின்றது என்ற உண்மையை சுட்டிக்காட்டாமல் மலையகத்தமிழரின் தனித்துவத்தினை அடையாளம் காணலாம்.

No comments: