POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Friday, March 19, 2010

திருச்சியிலிருந்து இராமச்சந்திரன்

இலங்கை மலையக மக்களின் துயர வரலாறு இக்கட்டுரையில் தெளிவாக புரியவைக்கப்பட்டுள்ளது. தங்களின் இன்றைய சமுதாய நிலை என்ன என்று தெரியாத, தங்கள் வராலாறு தெரியாத நிலைமையில் இருக்கும் இன்றைய மலையக இளைஞர்கள், இக்கட்டுரையின் வாயிலாக தங்களை இனம்கண்டு எதிர்கால முன்னேற்றதுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற முனைப்பை இக்கட்டுரை உணர்த்தும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது வரவேற்கதக்கதே. 200 வருட வரலாற்று நிகழ்வுகளை ஒரே பார்வையில் நம் கவனத்துக்கு கொண்டு வந்த திரு சடகோபனின் முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
மலையக மக்களின் வாழ்க்கையில் திரு K நடேச அய்யரின் பங்கு பற்றி நாம் அறிந்திராத சில விசயங்கள் இக்கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.இந்த வலைப்பூவை (blogger ) இன்றைய மலையக இளைய தலைமுறையினர் வாசிக்கும் படியாக அவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது முறையானதாகும் எனக்கருதுகிறேன்.
ஒருகோப்பை தேநீரின் சுவைக்குபின்னால் அடங்கிக்கிடக்கும் துயரம் தோய்ந்த ஒரு சமூக பின்னணி நாளைய அவர்களின் வாரிசுக்களுக்கு வெற்றிமாலையாக்கும் என்ற நம்பிக்கையோடு இன்றைய இளைஞர்கள் செயல்படவேண்டும். அதற்கான விழிப்புணர்வு இக்கட்டுரையாளரின் பேனா முனையில் பிறந்திருக்கிறது.
வாழையடி வாழையாக இவர்கள் சமூக நிலைப்பாடு மிகப்பின்னோக்கி சென்றதுக்கு முக்கிய காரணங்களாக நாம் கருத வேண்டிஉள்ளது
என்னவெனில் சரியான தலைமையின்மையும் கல்வியறிவு இன்மையும் தான். 200 ஆண்டுகால சரித்திரத்தில் அவர்கள் திட்டமிடப்பட்டே முன்னேறவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்
என்பது தெளிவாகிறது. சூழ்நிலைகள் காரணமாக இத்தனையாண்டுகள் கையறு நிலையில் அவர்கள் இருந்துவிட்டாலும் இனிவரும்காலங்கள் விழிப்போடு செயல்பட்டு முன்னேற வேண்டியது ஒவ்வொரு மலையக இளைஞனின் கடமையாகும்.
இம்மக்களின் விடிவுக்கு இக்கட்டுரையில் முன்வைக்கும் ஒருகாரணம் அவர்களை தேசிய இனமாக அறிவிக்கப்படவேண்டும் என்பதாகும்.
இன்று இலங்கையில் நாடற்றவர்கள் என்று யாரும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. வாக்களிக்கும் உரிமை ஒருவர் பெற்று விட்டாலே
ஒரு ஜனநாயக ஆட்சியில் குடியியல் உரிமை அனைத்தும் பெற்றதுக்கு சமம் என்றுதானே அர்த்தம். கட்டுரையாளரின் கூற்றுப்படி இப்பொழுது 50
சதவீத மக்களே தொட்டபயிர்செய்கையில் குறைந்த சம்பளம் பெரும் மக்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்களின் நியாயமான சம்பளத்தையும்,
மற்ற சமூகங்கள் வாழும் வாழ்க்கைத்தரத்துக்கு சமமான அந்தஸ்தையும் பெற்றுகொடுக்க நிச்சயம் முடியும் என்ற நிலையை வரும் காலங்களில்
நம்மால் உருவாக்க மலையக மக்களை தயார்படுதவேண்டியது பொறுப்புள்ள அரசியலார்கள்,ஊடகவியலார்கள் மற்றும் மலையக இளைஞர்களின் பொறுப்புமாகும்.
இன்று ஸ்ரீலங்கா tea என்ற காப்புரிமை பெற்று சர்வதேச சந்தையில் அதனை விற்று கணிசமான் இலாபமீட்டிவரும் இலங்கை அரசு, அதற்க்கு முதுகெலும்பாக உழைக்கும்
தோட்ட தொழிலாளர்களின் முறையான சம்பளத்துக்கு வழிவகை செய்யாமல் அவர்களை கொத்தடிமைகளாய் நடத்துவது சர்வதேச மனிதஉரிமை மீறலாகவே கருதப்படவேண்டும்.
இலங்கை தேயிலையை வாங்கும் ஐரோப்பிய மற்றும் உலகநாடுகளின் செவிகளில் நாம் சற்று உரக்க
சங்காக ஊதவேண்டும். அவர்களுக்கு இதன் பின்னணி என்ன என்பதை உணர்த்தவேண்டும்.
இன்று இலங்கை போர்குற்றம் புரிந்த ஒருநாடு என்ற குற்றசாட்டுக்கு இலக்காகி ஒரு இக்கட்டான நிலைக்கு
தள்ளபட்டதின் காரணம் நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இதன் காரணமாக gsp என்ற சலுகையை இலங்கை
இழந்துள்ளது. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்பதை கவனித்து அவ்வழியில் நாமும் செல்லலாமே.
எனவே உலக அளவிலான பார்வைக்கு நாம் நம் பிரச்சினையை கொண்டுசெல்லவேண்டும். அதற்கான
முயற்சியை இன்றைய இலங்கை மலையக மக்களின்
அரசியல் பிரதிநிதிகள்,தொண்டுநிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய கூட்டமைப்புகள் கண்டிப்பாக செய்யவேண்டிய
நிர்பந்தம் இன்ற ஏற்பட்டு உள்ளது.
அடுத்தது தோட்டங்களை விட்டு வெளியேறிய இளைஞர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களைகொண்டு சிறு நில உரிமையாளர்களாக
மாறி அந்நிலங்களில் பால்பண்ணை,மூலிகை பயிர்வளர்ப்பு, மற்றும் விவசாய முயற்சிகளில் இறங்கலாம். இதற்கான அரசு உதவிகளை
இதற்கென அமைந்துள்ள அமைப்புகள் செய்து கொடுக்கவேண்டும்.
படிப்படியாக இச்செயல்கள் அமையுமாயின் மலையாக மக்கள் காலமாற்றத்தில் தேசிய இனமாக மாறிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திரு சடகோபனின் பேனா இதுபற்றி இன்னும் எழுதும் என எதிர்பார்கிறேன்.
இராமச்சந்திரன்
திருச்சி தமிழ்நாடு

No comments: