POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Thursday, July 23, 2015


மலையக இலக்கிய வரலாறு கூறும் கூலித் தமிழ்- மாதவி சிவலீலன்


லங்கையின் வருமான முதுகெலும்பைக் கட்டி நிமிர்த்திய தோட்டத் தொழிலாளர்களின் இலக்கிய முயற்சியை விமர்சித்து வரலாற்றுப் பதிவு செய்த சிறப்புறு நூலாக இந்தக் `கூலித் தமிழ்` நூல் விளங்குகின்றது. இலக்கிய விமர்சனங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பினைத் துன்பியல் நாவல் ஒன்றை வாசிக்கும் மனோபாவத்துடன் வாசிப்பதற்குரிய தளத்தை இந்நூல் மூலம் மு. நித்தியானந்தன் எமக்குத் தந்திருக்கின்றார். இது மலையக மக்களின் வரலாற்று நூல், அந்த மக்களின் இலக்கியத்தைக் கூறும் நூல், அவர்களின் மொழி வரலாற்றைக் கூறும் நூல், அவர்தம் பண்பாடு வாழ்வியல் கூறும் நூல்.
இலக்கியங்கள் மீதும் அவற்றின் வரலாறுகள் மீதும் நித்தியானந்தன் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அகராதிகளில் மிகவும் விருப்பமுடையவர். மொழிகளின் நுணுக்கங்களை உய்த்துணரும் ஆற்றல் மிக்கவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் நிலைப்பாடுகளை அக்கறையோடு அவதானிப்பவர். இவை யாவற்றோடும் அவருக்கிருக்கின்ற ஆங்கிலப்புலமையும் சேர்ந்து இந்தப் பெறுமதியான நூல் வரக் காரணமாகின. இது ஒன்றும் வியப்பான விடயமல்ல.
ஈழத்தில் இந்தியத் தமிழர் சார்ந்த முயற்சிகள் பற்றியதான ஏழு கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன.  அறியப்படாத விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கின்றார். மிகத் தெளிவானதும் ஆழமானதுமான முன்னுரையுடன் நூல் அமைந்திருக்கின்றது. வரலற்றுப் பதிவை எத்தகைய தேடலுடன் நேர்மையாகப் பதிய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருக்கின்றார். The British Library, The School of Oriental and African Studies Libarary, என இவர் தேடல் விரிவடைந்து செல்கின்றது. எங்கெங்கு தகவல்கள் திரட்ட முடியுமோ அங்கெல்லாம் பெரு முயற்சியுடன் செயற்பட்டிருக்கின்றார். இதுதான் வரலாற்று ஆசிரியரொருவருடைய சீரிய பணியாக இருக்கும். இது போன்றே இந்நூலுக்கு மழவரையன் விஜயபாலன் எழுதிய அணிந்துரையும் சிறப்பைத் தந்துள்ளது.
00000
இலங்கை செல்ல விரும்புகின்ற கூலிகள் மண்டபம் முகாமில் மதுரைக் கம்பனி ஏஜென்டிடம் 52ரூபாயும் 10 அணாவும் வைப்புப் பணமாகச் செலுத்தியுள்ளனர். அவர்கள் இலங்கையில் தொடர்ந்து பதினெட்டு நாட்கள் வைத்தியரிடம் சென்றால் 50 ரூபா திருப்பிக் கொடுப்பார்கள். ஆனால் வைத்தியரிடம் சென்று வரும் தொல்லைகளினால் `தொலையட்டும்` எனக் கூறி இப்பணத்தை கூலிகள் பலர் திருப்பிப் பெறுவதில்லையெனக் கூறும் நித்தியானந்தன் அந்த 50ரூபாயை அட்டைப்படமாகப் போட்டிருக்கின்றமை மிகப் பொருத்தமுடையதாக அமைந்திருக்கின்றது.வயிற்றுப் பசிக்காக நம்பிக்கையோடு தமிழகத்தில் இருந்து வந்து, மலையகத்தில் மக்கள் பட்ட இன்னல்களை, படுக்கின்ற இன்னல்களை நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது.
`கோப்பி கிருக்ஷிக் கும்மி மலையகத்தின் முதல் நூல்’ ஆபிரகாம் ஜோசப் ஏபிரகாம் என்பவரால் எழுதியதாகும். தோட்டத்துரைமாரின் கைக்கூலியாகச் செயற்பட்ட ஜோசப் தன் நூலுக்கு வழங்கிய முன்னுரையில் தன்னுடைய ஈன நிலைப்பாட்டை எமக்குப் புடம் போட்டுக் காட்டியுள்ளார். அதிகாரவர்க்கத்துடன் இணைந்து செயற்படும் ஒவ்வொருவரும் தன்னின மக்களுக்குச் செய்கின்ற துரோகத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜோசப்பைப் பார்க்க முடியும். நித்தியானந்தன் விமர்சனம் என்ற வகையில் இந்நூலுக்கு எதிராக மிகக் காட்டசாட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார். ஜோசப் காட்டும் மலைநாடு என்பது உண்மையல்ல; அம்மக்களின் இழிநிலை யதார்த்தம் மிகப் பரிதாபமானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்விடத்தில் மலையகத்தில் இருந்து வெளி வந்த `தீர்த்தக்கரை` எனும் சஞ்சிகை பற்றிக் குறிப்பிட வேண்டும். அன்று ஐந்து இதழ்கள் 11403215_10152998693062362_6820027553322019362_nமட்டுமே வெளிவந்தன. அந்த இதழ்களில் மக்கள் வாய்மொழிப் பாடலை சி.வி வேலுப்பிள்ளை பதிவு செய்துள்ளார். அதிலொன்று பின்வருமாறு அமைக்கின்றது. “ரப்பரு மரமானேன் நாலுபக்க வாதுமானேன் இங்கிலீசுகாரனுக்கு ஏறிப் போக காருமானேன்“ இது தான் மலையக மக்களின் உண்மை நிலை. இத்தகைய பாடல்களை இந்நூலும் குறிப்பிடுகின்றது. இப்படிப் பல பாடல்கள் அவர்களின் வாய்மொழியாக அவர்தம் வாழ்வியல் சோகத்தையுணர்த்தும் போது இந்த நூலின் போலித்தன்மை உணரப்படுகின்றது.
ஜோசப்பின் இன்னொரு நூல் `தமிழ் வழிகாட்டி`; இது கூட தோட்டத் துரைமாருக்காகவும் ஆங்கில வர்த்தகர்களுக்காகவும் எழுதப்பட்டதாகும். இந்நூல் பற்றி நித்தியானந்தன் கூறும் போது, “ ஜோசப்பின் ஆங்கில, தமிழ்ப்புலமையை மட்டுமல்ல இலங்கையின் கோப்பி யுகத்தின் தோட்டத் துரைமாரது வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் நமக்குத் தருகின்றது“ எனக் குறிப்பிடுகின்றார். துரைக்கும் கூலிக்குமிடையில் நடக்கும் உரையாடல்கள் சுவாரசியமாக இங்கு அமைக்கப்பட்டு, அதனூடாக அவர்களுக்குத் தமிழ் போதிக்கப்பட்டுள்ளது.
`துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்` எனும் கட்டுரையில் மலையக மக்களின் அவலத்தின் இன்னொரு பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் கற்ற தமிழ் மலையகத் தமிழரை அடக்குவதற்காகக் கற்கப்பட்ட தமிழாகக் கூறப்படுகின்றது. ஸ்கொட்லாந்தில் அபடீன் எனும் இடத்தில் கீழைத்தேய நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் வெள்ளையர்களுக்காகத் தனியார் தமிழ் வகுப்புகள் நடைபெற்றுள்ளன. “Tamil to be taught Course for those going east Aberdeen class arranged’’ என இதற்கான விளம்பரம் உள்ளூர்ப் பத்திரிகையில் அமைந்திருக்கின்றது. இது எமக்குத் தெரியாத புது விடயமாக இங்கு பதியப்பட்டுள்ளது.
`கருமுத்து தியாகராசர், இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர்` என்கின்ற கட்டுரை இந்தியாவில் இருந்து இலங்கை வருகின்ற மக்கள் வழியில் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பற்றியதாக அமைந்துள்ளது. ஒரு செட்டியார், வியாபாரி, பொருளாதாரப் பலமிக்கவர் மக்களின் இழிநிலை கண்டு கொதித்தெழுந்த்திருக்கின்றார். எழுத்து இங்கு ஆயுதம் போன்று செயற்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இவர் ‘The Ceylon Morning Leader’ பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், இலங்கையில் இந்தியத் தொழிலாளர், மண்டபம் நோய் தடுப்பு முகாம், இந்தியத் தொழிலாளர் பிரச்சினை போன்றவை சம்பந்தமாகப் பிரசுரங்களை அச்சடித்து வெளியிட்டுள்ளார்.
மண்டப முகாம் கஷ்டங்கள் பார்க்கும் போது சாதாரண ஏழைத் தொழிலாளிகள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் அங்கு வருத்தப்பட்ட நிலையை உணரமுடிக்கின்றது. உடைகள் களைந்து தொற்று நோய்கள் நீக்கப்படுவதும் நெஞ்சில் சூடு போடுதலும் ஆயிரம் பேர் தங்கும் இடத்தில் நாலாயிரம் பேரைத் தங்க வைத்தலும் உணவின்றித் துயர்படுதலும் இங்கு பதிவுகளாகின்றன. அந்த வாழ்வின் அவலம் எப்போதும் வலி பொருந்தியதாக விளங்கி நெஞ்சை வருத்துகின்றது. கலகக் குரலாக ஒலித்த பத்திரிகைக்காரனின் எழுத்து எவ்வளவு வலிமைமிக்கது என்பதுவும் இங்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் வருகையுடன் தமிழுக்கு அறிமுகமாகிய நாவல் இலக்கிய வடிவம் ஆரம்பத்தில் தமிழ் நாட்டையே களமாகக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தது. அந்த வகையிலேயே ஆ. போல் எழுதிய `சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி ` எனும் மலையகத்தின் முதல் நாவலும் தமிழ்நாட்டு மண்ணைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாக விளங்குகின்றது. துரதிக்ஷ்டமாக மலையக மக்கள் வாழ்வை இந்நாவல் பிரதிபலிக்காமல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஜி.எஸ்.எம்.சாமுவேல் எழுதிய நாவல் கண்ணனின் காதலி. அதியற்புதக் கற்பனையும் யதார்த்தமும் நிறைந்த இந்நூலில் மலையக மக்கள் வாழ்வைக் காண முடிகின்றதென நித்தியானந்தன் குறிப்பிடுகின்றார். சமுக ஏற்றத் தாழ்வு, சாதியக் கொடுமை, பாலியல் தொல்லை, மலையகத் தோட்ட வாழ்வின் அவலம், காந்தியம் போன்ற பல்வேறு விடயங்களை இந்நாவல் விபரிக்கின்றது. அந்த வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் மலையக இலக்கிய வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
`அஞ்சுகம்; மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை` எனும் தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கின்றது. பணம் சம்பாதிப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்களெனும் ரீதியில் அஞ்சுகமென்ற கணிகையர் குலப் பெண்ணையும் அவளது எழுத்தாக்கமாகிய உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு எனும் நூலையும் கூலித் தமிழ் நூலுக்குள் நித்தியானந்தன் பொருத்திப் பார்க்கின்றார். அஞ்சுகத்தின் நூல் ஒரு வரலாற்று நூலாக விளங்குகின்றது.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நட்டுவச் சுப்பையனார் எழுதிய `கனகி புராணம்` வண்ணார்பண்னை சிவன் கோவில் தாசி கனகி பற்றியதானதாக அமைந்துள்ளது. இது சமுகத்தில் உயர் ஸ்தானத்தில் இருப்போர்களும் சாதியம் பேசுகின்றவர்களும் இவளிடம் சென்று வருவதாக எழுதப்பட்ட காரணத்தால் திட்டமிட்டுப் பல பாடல்கள் அழிக்கப்பட்டன. இன்று ஒரு சில பாடல்களே மிஞ்சியுள்ளன.
கணிகையர் குலப்பெண்கள் ஏனைய குலப்பெண்களை விட ஆளுமை மிகுதியானவர்கள் என்பதுவும் கல்வியறிவும் கலையறிவும் கொண்டவர்கள் என்பது நாம் வரலாறுகள் மூலம் தெரிந்து கொண்டவையே. அவற்றைப் பறை சாற்றும் வகையில் அஞ்சுகமும் தனது தமிழறிவு, கல்வியறிவு சமயவறிவு என்பவை துலங்கும் வகையில் தன் நூலை ஆக்கியுள்ளாரெனக் குறிப்பிடும் நித்தியானந்தன் இவர் பற்றி மிக அருமையான கட்டுரை எழுதியுள்ளார்.

இங்கு இடம் பெற்றுள்ள கட்டுரைகளிலும் ,நாவல்களிலும் பெண்கள் ஆளுமைமிகு பெண்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளமை மேலும் சிறப்புறு அம்சமாகும். மலையக மக்களின் வலி மிகுந்த பக்கங்கள் இங்கு வலிமையுடன் பேசப்பட்டுள்ளது. வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வரலாற்றை நித்தியானந்தன் அவர்கள் பதிவு செய்ததன் மூலம் எப்போதும் பேசப்படும் நூலாகக் கூலித் தமிழ் விளங்கும்

Thursday, July 16, 2015

அப்பா
======
அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார். அவர் தனக்கென்று எதனையும் செய்வதில்லை. போட்டி போட்டுக் கொண்டு போலிம்களில் முன்செல்ல முனைந்ததில்லை. பஸ்ஸிலோ, கோச்சியிலோ பயணம் செய்த போது தான் அமர்ந்திருக்கும் இருக்கையைக் கூட யாருக்காவது விட்டுக் கொடுத்து விடுவார். அவர் தனக்கென வைத்திருந்த ஒரே ஒரு பொருள் பழைய ஹம்பர் சைக்கிள். அதனையும் யாராவது இரவல் கேட்டால் கொடுத்து விட்டு தான் நடந்து செல்வார்.
அப்பாவுக்கு போட்ட சோற்றை அவர் முழுமையாக ஒரு போதும் சாப்பிட்டதில்லை. எங்கள் வாய்களிலும் இரண்டு இரண்டு பிடிகள் திணித்து விடுவார். போதாதற்கு நாயும் பூனையும் இரண்டு கவளம் பெற்றுக் கொள்ளும். தான் குடித்து விட்டு மிஞ்சிய நீரை வீணாக கீழே கொட்டமாட்டார். எழுந்து சென்று ஏதாவது செடிக்கு ஊற்றி விட்டு வருவார்.
அப்பா விடுமுறை கிடைத்த போதெல்லாம் வீட்டில் அம்மாவுக்கு உதவுவார். வீட்டைத் துடைத்து சுத்தப்படுத்துவார். குளியலறை, மலசலகூடம் சுத்தம் செய்தல், துணி துவைத்தல் எல்லாம் அவர் பணி. அப்பா சுவையாக சமைப்பார் என்ற போதும் அம்மாவின் சமையலையே அதிகம் சுவையென்பார். எங்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பார். இரவில் ஊர்ப் பிள்ளைகளுக்கும் இலவசமாக இங்கிலீசு கற்றுக் கொடுப்பார். அதனால் எங்களூரில் எல்லோரும் ஷேக்ஸ்பியரை அறிந்து வைத்திருந்தனர்.
தோட்டத்து மரங்களில் மரங்களின் உச்சாணிக் கொம்புகளில் பழுக்கும் பழங்களை பிடுங்க மாட்டார். அவற்றை பறவைகளுக்கு பூஜை செய்வார். கல், தடி கொண்டு அவற்றுக்கு வீசுவதற்கு தடை விதித்தார். தோட்டத்தில் இருந்த ஏழு தென்னை மரங்களில் இரண்டை திருடர்களுக்கு ஒதுக்கினார். அவர்களும் கூட அவற்றில் அன்றி வேறு மரங்களில் கை வைக்க மாட்டார்கள்.
அப்பாவுக்கு அறுபத்து நான்கு கலைகளில் அரைவாசிக் கலைகள் தெரிந்திருந்தன. காயம் பட்டால், கையொடிந்தால், கால் முறிந்தால் கட்டுப் போட பத்துப் போட அவருக்குத் தெரியும். தடிமன், காய்ச்சல் தலைவலிக்கு கசாயம் காய்ச்சிக் கொடுப்பார். அம்மை போட்டால் வைசூரி கண்டால் அவரையே ஊறார் அழைத்துப் போவார்கள். நீர்க் குழாய் திருத்துதல், மின்சாரவயர் பொருத்துதல், கானு கக்கூசு உடைந்தால் கூரை வேய்தல் தொட்டது தொன்னூறுக்கும் ஊராருக்கு அப்பாதான் வேண்டும்.
அப்பா இவை எல்லாவற்றையும் செய்தது புண்ணியம் கிடைக்கும் என்றோ பிறர் மீதுள்ள அனுதாபத்தினாலோ அல்ல. ஒரு மனிதனின் கடமை அது என்றே அவர் கருதினார். இத்தகைய உதவி உபகாரங்களை செய்யும் போது பிறர் மனதில் கடன்பட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் விதத்தில் கவனமுடன் இருப்பார். அப்பா இறுதி வரை புன்னகையுடனேயே வாழ்ந்தார். அவர் இறந்த பின்னரும் கூட அவர் முகத்தில் அந்த புன்னகை மாறாமல் இருந்தது.
இரா. சடகோபன்
================

Wednesday, February 11, 2015

<div id="_TC_PB_BANNER"></div>
<script type="text/javascript">
_TRIPLECLICKS_PB_BANNER_URL="http://www.tripleclicks.com/pbBanner.php?sfiid=/15299105&view=T2&curr=LKR";
</script>
<script type="text/javascript" src="http://www.tripleclicks.com/common/pbBanner.js"></script>

Monday, October 13, 2014

சட்டத்தரணி இரா. சடகோபனின்
"கண்டிச் சீமையிலே நூல் வெளியீடு"
தம் முன்னோரின் வரலாற்றை உணர்வுகளுடன் பிழிந்து தந்துள்ளார் நூலாசிரியர்”

மா. பா. சி.

கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் அயலகமான தென்னிந்தியாவிலிருந்து 1820ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களே இன்றைய மலையகத் தமிழரின் மூதாதைகள். இம்மூதாதைகளின் சந்ததிகள் இலங்கை அரசில் அமைச்சர் அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு இன்று பெரும் கணிப்பையும் பெற்று விட்டனர். இன்றைய மலையகத் தமிழர்கள் இந்நிலையை அடைவதற்கு அவர்களது மூதாதைகள் செய்த தியாகங்களை முக்கியமாகக் கோப்பிப் பயிர்செய்கைக் காலத்தில் அவர்கள் பட்ட மனச்சோகங்களை, அவமதிப்புகளை வரலாற்று ரீதியில் ஆவணப்படுத்தியிருக்கும் நூலே 'கண்டிச் சீமையிலே' நாடறிந்த இலக்கிய வாதி சட்டத்தரணி இரா. சடகோபன் இந்நூலை எழுதியுள்ளார்.

வீரகேசரி நிறுவனமும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றமும் இணைந்து இந்நூலுக்கான வெளியீட்டு விழாவை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 14.09.2014ஆம் திகதி மிகச்சிறப்பாக நடத்தின.

நூலாசிரியரின் தாயார் திருமதி இராமையாவும் மற்றும் தகைசார் பிரமுகர்கள் சிலரும் மங்கலச் சுடரேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

சக்தி தொலைக்காட்சியின் செல்லமாய் ஒரு குரல் தேடல் ஜூனியர் சுப்பர் ஸ்டார் 2014 மெல்லிசைப் போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசைப் பெற்ற பாடகி செல்வி வைஷாலி யோகநாதன் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினார்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவிற்கு  சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமை தாங்கினார். செல்வி ஷாமினி சடகோபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரை :
சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் "கண்டிச் சீமையிலே" ஒரு பிரமாண்டமான நூலாகக் கண்முன் காணப்படுகிறது. மனதில் இடத்தைப் பிடிக்கின்றது.  இந்நூலாசிரியர் இரா. சடகோபன் இதை எழுதி முடிக்க தனது கடும் உழைப்பை ஈந்துள்ளார்.  அவருக்கு மிகவும் நெருக்கமான சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா இதற்காகச் சடகோபன் பட்ட சிரமங்களைச் சொன்னார்.

நூலொன்று அதன் உள்ளடக்கக் கனதியாலேயே பெருமை பெறும். மேன்மை கொள்ளும். ஒரு சமூகத்தின் மிகவும் சோகமான வாழ்க்கையைச் சடகோபன் சுவை  குன்றாது இந்நூலில் எழுதியுள்ளார். புனை கதையை ஒத்ததாக உள்ளது.

வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்த பின் அதன் பொருளாதாரம் மாற்றம் பெற்றது. ஏற்றுமதியை நம்பும் பொருளாதார முறைமைக்கு இட்டுச் செல்லப்பட்டது. சடகோபன் இந்நூலை எழுத உந்து சக்தியாக இருந்தது டொனோவன் மோல்ட் றிச் எழுதிய BITTER BERRY BONDAGE என்ற ஆங்கில நூலாகும். இந்நூல் மிகக் கடுமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. சடகோபன் அதைச் சலிக்காது படித்துத் தனது நூலை எழுதியுள்ளார்.

இன்று மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் நூறாவது பிறந்த தினமாகும். இந்நாளில் "கண்டிச் சீமையிலே" நூல் வெளி வருவது பொருத்தமாகும். சி. வி. வேலுப்பிள்ளையின் நாட்டார் பாடல் தொகுப்பில் கண்டிச்சீமை பற்றிச் சொல்லப்படுகிறது. மக்கள் வாழ்க்கை பற்றியும் உண்டு. புதுமைப்பித்தனும் துன்பக் கேணியில் பதிவு செய்துள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை கண்டியே மையப்படுத்தியிருந்தது. அது பற்றி சடகோபனின் இந்நூலில் அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது. இங்கு தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்தவர்களை இரக்கமற்ற வகையில் கொடுமைப்படுத்தியதை டொனோவன் மோல்ட்றிச் ஆங்கில நூலில் மிக உணர்வுபூர்வமாக விபரித்துள்ளார்.

அதன் தாக்கமே சடகோபனையும் கண்டிச்சீமையிலே நூலை மிகவும் மனதை நெகிழ வைக்கும்படி எழுத வைத்துள்ளது. கோ. நடசய்யரிடமும் கடின உழைப்பும் சகிப்புத்தன்மையும் இருந்தது. அதேமாதிரி சடகோபனிடமும் உண்டு. உத்வேகமும் இருந்தது.

உறைந்து போய்க்கிடந்த மலையக மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டென்பதை உணர்த்தியவர் கோ. நடேசய்யர். அதே பாதையில்தான் சி. வி. வேலுப்பிள்ளையும் கே. கணேசும் சென்றிருக்கின்றனர். அந்தக்காலத்தில் வெளிவந்த கும்மிப்பாடல் தொகுப்பு நூலொன்றில் தோட்டத்தொழிலாளிகளை கங்காணிகளும் கண்டக்டர்மாரும் இடுப்பில் உதைத்து வருத்திய பாடல் உண்டு. வெள்ளைத்துரைமாரைக் கேள்வி கேட்கும் பாடல்களை மலையகத் தொழிலாளர்கள் பாடுவதற்கும் தடை போட்டனர். வேர்களைத் தேடும் ஆர்வத்தில் இரா. சடகோபன் இந்நூலை எழுதியுள்ளார். இதை வெளியிட்டதற்காக வீரகேசரி நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும்.

நூல் வெளியீட்டுரை
எஸ்.ரி.தயாளன்

எமது வீரகேசரி பத்திரிகை எண்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ் வாழ்வோடு இரண்டறக் கலந்து நெறி தவறாது செய்திகளை வாசகருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல்வேறுபட்ட நூல்களை வாசகருக்கு தந்துள்ளோம். அது வாசகருக்கு இன்றும் ஞாபகமிருக்கும். பல புதிய எழுத்தாளர்களை நூலாசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளோம். இடை நிறுத்தப்பட்ட அப்பணி மீண்டும் தொடரப்படுகிறது. எமது முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனின் சமூக அக்கறை காரணமாக அப்பணி மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டாவது வெளியீட்டுச் செயற்பாட்டில் 10ஆவது நூலாக இரா. சடகோபனின் 'கண்டிச் சீமையிலே' நூல் இன்று வெளியிடப்படுகிறது. வாசிப்பு குறைச்சலாலேயே குற்றச் செயல்கள் ஏற்படுகின்றன. அழிவுகளைத் தடுத்து நிறுத்த வாசிப்பின் முக்கியத்துவத்தை வளர்த்தெடுக்க எத்தனிக்கிறோம். எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றோம்.

'கண்டிச்சீமையிலே' நூலில் வெளிவந்தவை எமது ஏடான சூரியகாந்தியில் வெளிவந்தவை. கதை சொல்வது போல் சடகோபன் எழுதியுள்ளார்.

அறிமுக உரை
சு. முரளிதரன்
(கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சு)

இரா. சடகோபன் 'கண்டிச் சீமையிலே' நூல் மூலமாகச் சரியான நூலொன்றை நமக்குத் தந்துள்ளார். பாரிய பணியொன்றை முன்னெடுத்திருக்கின்றார். கோப்பிக் காலத்தை பற்றிச் சொல்கிறார். நாட்டார் பாடல் தொகுப்புப் பாடலொன்றில் கண்டி பற்றியும் உண்டு. மலையகத்தின் ஒவ்வொரு நாட்டார் பாடலின் ஒவ்வொரு வரியிலும் வருத்தம் தெறிக்கும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு எப்படி எழுதுவது? என்பதற்கு 'கண்டிச் சீமையிலே' நூல் உதவத்தக்கது. கோப்பிக் காலத்துத் தோட்டத்துரைமார் சிலரும் எழுத்தாளராக இருந்துள்ளனர். பிரித்தானியர்கள் ஏன் இந்தியர்களைத் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கொண்டுவந்தனரென்பதற்குச் சடகோபனின் இந்நூலில் விளக்கமுண்டு. அவர்களது உழைப்புத்திறனை இனங்கண்டே வெள்ளைக்காரர் அவர்களை இங்கு கொண்டு வந்தனர்.

சிறப்பான வடிவமைப்பை இந்நூல் கொண்டுள்ளது. சாதாரண தொழிலாளியும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய நூலாக உள்ளது. இந்நாட்டின் வரலாறு, பொருளாதாரம் என்பவற்றைத் தருகின்றது. தோட்டத் தொழிலாளியின் வாழ்வை வேதனையோடு நினைத்துப் பார்க்க வைக்கின்றது. தொழிலாளர் சிந்திக்கும் பாங்கையும் விளக்குகின்றது.

ஜூனியர் சுப்பர் ஸ்டார் செல்வி வைஷாலி யோகநாதன் 'பரதேசி' சினிமாப் படப் பாடலொன்றைப் பக்கவாத்தியங்களோடு பாடிச் சபையோரை மகிழ்வித்தார்.

நூலாய்வுரை  ஆய்வறிஞர் எம். வாமதேவன்
1823 – 1893 காலப்பகுதி இலங்கையின் கோப்பிக் காலமாகும். இரா. சடகோபனின் 'கண்டிச் சீமையிலே' நூலில் 14 அதிகாரங்கள் உண்டு. உப தலைப்புகளும் உண்டு. சடகோபன் 96 உப தலைப்புகளாகப் பகுத்து எழுதியுள்ளார். நெஞ்சில் ஆழப்பதியக்கூடிய தலைப்புக்களாக உள்ளன. எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஏடான சூரியகாந்தியில் குறுங்கட்டுரைகளாக வெளிவந்தவையே மெரு கூட்டப்பட்டு இப்பாரிய நூலாக வடிவெடுத்துள்ளன.

இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கையோடு ஆரம்பமான நவீன பொருளாதாரம் அதன் பின் உண்டான இரட்டைப் பொருளாதாரம் என்பனவும் நூலிலுள்ளன. கடைசி நான்கு அத்தியாயங்களும் மிகவும் முக்கியமானவை. சமூக வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. இத்தகைய நூலொன்றில் மக்களின் பண்டைக் கால வாழ்வை தருவது சிரமமாகும்.

இலங்கை கோப்பித் தோட்டங்களுக்கு வந்த பின்னரே இந்தியத் தொழிலாளர்கள் அரிசிச் சோற்றை உண்டுள்ளனர். அதன்பின் கோதுமை உணவும் அவர்களுக்கு உண்ணக் கிடைத்துள்ளது. இத் தொழிலாளர்கள் ஒரே இடத்தில்தான் வாழ விரும்பியுள்ளனர். அதற்கமையவே வீடுகளும் அமைக்கப்பட்டன. இவர்களுக்கு கல்வி பிரதானமாக இருக்கவில்லை. கற்பதற்கு மாணவர்களும் இருக்கவில்லை. இரவில்தான் படித்தனர். தமது மதத்தைப் பரப்பும் நோக்கோடு கிறிஸ்தவ மதத்தவர் இத் தொழிலாளிகளுக்கான கல்வியை முன்னெடுத்தனரெனவே சொல்லப்படுகிறது. மலையகத்தில் இன்னமும் கிறிஸ்தவ மத  செல்வாக்கில்லை. தமது கலாசார அடையாளங்களை மலையகத்தவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை காப்பாற்றுகின்றனர். SHEDULED CASTE ஐ சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களே இங்கு கொண்டு வரப்பட்டனர். அது பற்றியும் இந்நூலில் தகவலுண்டு.

இந்தியாவில் அதிக சாதி அமைப்புகள் இருப்பதால் இங்கு வந்த தொழிலாளிகள் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. பொருளாதார அடக்கு முறையும் அங்கு இருந்தது. நூலின் கடைசி மூன்று அத்தியாயங்களும் சோக உணர்வைத் தருகின்றன. நோயுற்ற தொழிலாளிகள் வைத்தியசாலைக்குச் செல்வதில்லை. போக்குவரத்து வசதியீனத்தால் நோயாளியைத் தொட்டுத் தூக்கிச் செல்ல வேண்டுமென்பதால் தோட்ட துரைமாரே நோயாளிகளுக்குச் சிகிச்சைகளையும் செய்தனர். சுகாதார சேவையைப் பொறுத்தமட்டில் இன்னமும் நிலை மாறவில்லை. The King is Dead. Long Live Kingஇது முடியாட்சி பாரம்பரியம். அரசர் இறந்து விட்டார். அரசர் வாழ்க. இறந்தவர் போக அடுத்த மன்னன் வருவான் என்பதே அதன் தாற்பரியம். கோப்பி இறந்து விட்டது. கோப்பிக் காலம் முடிந்து விட்டது. ஆனால் அந்தக் காலத்து நிலைதான், இன்றும் மலையகத்தில் சோக வரலாறு தொடர்ந்திருக்கும் என்பதை நூல் அறியத் தருகிறது.

கருத்துரை: மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம்
பேசப்படாத எழுதப்படாத தொழிலாளரின் வாழ்வை நினைவுபடுத்தும் நூல் 'கண்டிச் சீமையிலே' பெருந்தோட்ட மக்கள் எப்படித் துன்புறுத்தப்பட்டனரென்பதை ஆங்கிலேயரும் எழுதியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வரலாறு உண்டு. என்னை நான் உணர்ந்திருக்க வேண்டும். இத்தகைய ஒன்றான BITTER BERRY BONDAGE என்ற ஆங்கில நூலை வாசிக்க வேண்டும். ஆங்கில எழுத்தாளர் டொனோவன் மொல்ட்ரிட்ச் தனது நூலை இலக்கியச் சுவையோடு எழுதியுள்ளார்.

இரா. சடகோபன் நூலுக்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அணிந்துரை தந்துள்ளார். நூலுக்கு மங்களகரமானதாக உள்ளது. அணிந்துரைகள் நூலுக்குக் கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். 'பேராசிரியரின் அணிந்துரை தேஜஸைக் கொடுக்கின்றது. உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே என்பதற்கமைய மேற்குடி மக்களைப் பற்றிய எழுத்துக்களே பதிவாகியிருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. அடிநிலை மக்கள் பற்றிய எழுத்துக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

பிரதம அதிதி உரை பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
'சாகித்திய ரத்னா' என்ற இலங்கை அரசின் உயர் விருதை முதன்முதல் மலையகத்துக்கு வாங்கித் தந்தவர் தெளிவத்தை ஜோசப் தான். வீரகேசரி நிறுவனத்தால்தான் 'கண்டிச் சீமையிலே' போன்ற நூல்களை வெளியிட முடியும். இது மகத்தான பணி. சமூகத்திடமிருந்து இலாபத்தைப் பெற்று விட்டால் போதாது. அச்சமூகத்திற்கு உதவவும் வேண்டும். முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனை இப்பணிக்காகப் பாராட்ட வேண்டும்.

இரா. சடகோபனின் இப்பணி மிகவும் முக்கியமானது. இது எல்லோராலும் முடியாது. ஓவியத்திலும் அவருக்கு ஆற்றல் உண்டு. 1800களின் வரலாறு நூலில் பேசப்படுகிறது. இதன் நோக்கமென்ன? ஒவ்வொருவரும் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 2030ஆம் ஆண்டில் இலங்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். இதற்கு வரலாறு தேவை. அதை அறிந்திருக்க வேண்டும். இத்தகைய நீட்சிகளைப் பற்றிச் சிந்திக்க இந்த அறிவு கை கொடுக்கும். இத்தகைய முயற்சிகளுக்கு இரா. சடகோபனின் இந்நூல் உதவும்.

கறுப்பினத்தவர்கள் இன்று அமெரிக்கராக வளர்ச்சி கண்டுள்ளனர். தாம் யார் என வேர்களைத் தேடுகின்றனர். இது சம்பந்தமாக ROOTS என்ற நூலும் வந்துள்ளது. பல் வகைமையான எழுத்துருக்களை எழுதுவதற்கும் சில முறைமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவைகள் தமிழிலும் உண்டு.

வரலாற்று வரவியல் வரலாற்றை எப்படி எழுத வேண்டுமென்பதை கற்பிக்கும். அதன்படியே வரலாறு எழுதப்பட வேண்டும். ஆங்கில வரலாறுகள் பிரபுக்களைப் பற்றிச் சொல்கின்றன. சாதாரண மக்களை எழுதவில்லை. அவ்வண்ணமே தமிழிலும் காணப்படுகின்றது. எழுத்தாளர்கள் கல்கியும் பொன்னியின் செல்வனிலும் சிவகாமியின் சபதத்திலும் மன்னர்களையே மையப்படுத்தி உள்ளார். அப்போது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வரலாறு இல்லையா? தலித்துகள் மனிதர்களில்லையா?

ஏற்புரை: இரா. சடகோபன்
(நூலாசிரியர்)
இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றி கோப்பிப் பயிர்ச் செய்கைக்கு எத்தனித்த போது அது ஏற்றதல்லவெனச் சிலர் ஆலோசனைகள் கூறினர். இருந்தும் அந்த ஆலோசனைகள் ஆங்கிலேயர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கோப்பிப் பயிர்ச்செய்கையிலேயே ஈடுபட்டனர். பரந்தளவில் செய்ய முடிவெடுத்தனர். தொழிலாளிகள் தேவைப்பட்டனர். சிங்களத் தொழிலாளிகள் தம்மை ஆளவந்த அந்நியனின் கீழ் நாம் வேலை செய்வதா? எனத் தன்மானம் பேசினர். இறுதியில் தமிழ் நாட்டிலிருந்து தொழிலாளிகளைப் பிடித்து வந்தனர்.

கடல் கடந்தும் நடந்தும் தொழிலாளிகள் கண்டிக்கு வந்தனர். வாந்திபேதியால் துன்பப்பட்டனர். மலையகத் தேசிய இனம் எவ்வாறு உருவாகியதென்பதை எனது இந்த நூல் வெளிப்படுத்துகின்றது. அன்றுபோல் இன்றும் மலையக மக்கள் 10'x8' காம்பராக்களில் தான் வாழும் நிலை நீடிக்கின்றது. இதையெல்லாம் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.

நன்றியுரையை உதவிக் கல்விப் பணிப்பாளர் கிறேஸ் சடகோபன் நிகழ்த்தினார்.

எழுத்தாளர் மல்லியப்பூ சந்தி திலகர் நிகழ்ச்சிகளை தகவல்களோடு தொகுத்து வழங்கினார்.

(நன்றி: தினக்குரல்)